அரச ஊழியர்கள் வௌிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வதற்கான நடைமுறை என்ன? பணியகம் விளக்கம்

அரச ஊழியர்கள் வௌிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வதற்கான நடைமுறை என்ன? பணியகம் விளக்கம்

அரச ஊழியர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வதற்கான நடைமுறை தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், மேலதிக பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய விளக்கமளித்துள்ளார்.

கடந்த தினங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்பு அமைய அரச ஊழியர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாகவும், அதில் அவர்களுக்கு அது தொடர்பில் விசேட சந்தர்ப்பம் இருப்பதாகவும் கூறப்பட்ட விடயம் தொடர்பில் பெருமளவான அரச ஊழியர்கள் எமது பணியகத்தைத் தொடர்பு கொண்டு வினவுகின்றனர்.

நாங்கள் பணியகம் என்ற அடிப்படையில் மிகவும் சரியான காரணத்தை விடயத்தை உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும்.

தற்போது இலங்கை அரசாங்கத்தில் அரச கட்டமைப்பில் கட்டமைப்பில் சேவையாற்றி கொண்டிருக்கும் எந்த ஒரு அரசு உத்தியோகத்தரும் அரசாங்கத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி இருந்தால் சம்பளமற்ற விடுமுறை பெற்றுக்கொண்டு ஆங்கிலத்தில் சொல்வதானால் No Pay சம்பளமற்ற விடுமுறையைப் பெற்றுக்கொண்டு இரண்டு வருடங்களுக்கோ அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்த காலப்பகுதிக்குள் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முடியும்.

எனினும் வெளிநாட்டிற்குச் சென்று வேலை செய்துவிட்டு மீண்டும் இலங்கைக்கு வந்தால், தாங்கள் பணியாற்றிய காலத்தில் தங்களது  பதவிநிலையில் சிரேஷ்டத்துவம் இல்லாமல் போய்விடும் என்ற காரணத்தினால் பெருமளவானோர் வௌிநாட்டு தொழிலுக்கு செல்வதில்லை. அதனால்தான் அந்த சிரேஷ்டத்துவத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த சந்தர்ப்பத்தை வழங்க அரசாங்கம் யோசனை ஒன்றை முன்வைத்து இருக்கின்றது.

பாடத்திட்டங்களை முழுமைப்படுத்த காலமில்லை: மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு!

ஒருவேளை சாப்பிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள வர்த்தக வலய ஊழியர்கள்

பிரதானிகளின் பணிநீக்கம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தினால் அமைச்சுக்களுக்கு அறிவித்தல்

எனினும், இந்த திருத்தப்பட்ட முறைமைக்கு அமைய இன்னும் இது தொடர்பில் அரச சேவைகள் அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்படவில்லை.  எனவே. நாங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்ற அடிப்படையில் உங்களுக்கு வழங்கும் ஆலோசனையானது, தற்போது சம்பளமற்ற விடுமுறை பெற்றுக்கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லமுடியும். எனினும்  எதிர்காலத்தில் திருத்தப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைய சம்பளமற்ற விடுமுறையை வழங்கி, நீங்கள் பணியாற்றிய காலத்திற்கு அமைய, உரித்தான சிரேஷ்டத்துவத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும். - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image