EPF ஐ பாதுகாக்க ஜனாதிபதியை நாடும் தொழிற்சங்கங்கள்

EPF ஐ பாதுகாக்க ஜனாதிபதியை நாடும் தொழிற்சங்கங்கள்

ஊழியர் சேமலாப நிதியத்தை (EPF) பாதுகாக்கும் யோசனை அடங்கிய ஆவணம் இன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட உள்ளது.

 
சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொது சேவைகள் தொழிலாளர் சங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
 
இன்று முற்பகல் 11 மணியளவில் குறித்த ஆவணத்தை ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்க உள்ளதாக அந்த தொழிற்சங்கத்தின் இணை செயலாளர் அண்டன் மார்கஸ் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
13 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
 
1. சுதந்திர வர்த்தக மண்டலங்கள் மற்றும் பொது சேவைகள் தொழிலாளர் சங்கம்
2. இலங்கை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு
3. சுதந்திர சேவையாளர் சங்கம் 
4. ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம்
5. தேசிய கடற்தொழிலாளர்களின் சங்கம் - இலங்கை 
6. தொழிலாளர்களின் தேசிய சங்கம்
7. சிலோன் தோட்டத் தொழிலாளர் சங்கம் 
8. கூட்டுத்தோட்ட தொழிற்சங்க மையம் 
9. ஒருங்கிணைந்த தொழிலாளர் கூட்டமைப்பு 
10. இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பு
11. இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்
12. இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம்
13. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image