உண்டியல் முறையில் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது!

உண்டியல் முறையில் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது!

உண்டியல் முறையில் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் பொரலஸ்கமுவ - பெப்பிலியான பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, உண்டியல் முறையில் பரிமாற்றுவதற்கென வைத்திருந்த 50,000 யூரோ பணமும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த யூரோ தொகையின் இலங்கை பெறுமதியானது, 18.69 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைதானவர் பொரளை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image