ஊரடங்கு தொடர்பில் புதிய அறிவித்தல்!

ஊரடங்கு தொடர்பில் புதிய அறிவித்தல்!

பொது மக்கள் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நாளை (12) காலை 7.00 மணிக்கு நீக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது

நாளை காலை 7.00 மணிக்கு நீக்கப்படும் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிற்பகல் 2.00 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவ்வூரடங்கு உத்தரவு மீண்டும் மறுநாள் (13) காலை 6.00 மணிக்கு நீக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் பொது போக்குவரத்து வீதிகள், ரயில்பாதைகள், பொதுப்பூங்காக்கள், பொது மைதானங்கள் மற்றும் ஏனைய பொதுவிடங்கள், நகரங்கள் மற்றும் கடற்கரைகளில் உரிய அதிகாரிகளின் எழுத்துமூல அனுமதியின்றி செல்ல முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.​

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image