காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

காலி முகத்திடல் – கோட்டாகோகமவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொலிஸார் விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகமவில், ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் போராட்டக்காரர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்தனர்.

மே மாதம் 6 ஆம் திகதி முதல் நாட்டில் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மே மாதம் 9 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என பொலிஸார் அறிவித்தனர்.

அவ்வாறு பொதுமக்கள் ஒன்றுகூடுவார்களாயின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியை தவிர, வீதிகள், ரயில் பாதை, பொதுப்பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் தங்குவதற்கு எவருக்கும் அனுமதி இல்லை எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

நியூஸ்பெஸ்ட் 

மேலும் செய்திகள்

வேலைநிறுத்தம் தொடர்பில் தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

எரிபொருள் விநியோகம் தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விசேட அறிவிப்பு

ஏழரை மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் சாத்தியம்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image