திட்டமிட்டபடி கற்பித்தலை முன்னெடுங்கள்- அதிபர் ஆசிரியர்களிடம் கோரிய ஜோசப் ஸ்டாலின்!

திட்டமிட்டபடி கற்பித்தலை முன்னெடுங்கள்- அதிபர் ஆசிரியர்களிடம் கோரிய ஜோசப் ஸ்டாலின்!

திட்டமிட்டபடி பாடசாலைகள் கடமைகளை அதிபர்கள், ஆசிரியர்கள் ஆற்றுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று (09) முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தற்போது அரசினால் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து இன்று கொழும்பு கோட்டை பகுதியில் பிற்பகல் 4 மணிக்கு ஆர்ப்பாட்டங்களை நடாத்தவுள்ளோம். மாணவர்களின் கல்வி நிலையைக் கருத்தில் கொண்டு அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடாது தமது கடமைகளை ஆற்றுமாறும், தமது கடமைகளை முடித்த பின்னர் அதிபர்கள் ஆசிரியர்களை இப்போராட்டத்தில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image