எமக்குத் தேவை தலைமைத்துவ அரசு! சர்வதிகார குடும்ப ஆட்சி வேண்டாம் - சட்டத்தரணிகள்

எமக்குத் தேவை தலைமைத்துவ அரசு! சர்வதிகார குடும்ப ஆட்சி வேண்டாம் - சட்டத்தரணிகள்

அட்டன் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகளின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று அட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்னால் நேற்று (05) நடைபெற்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழ்நிலையை அரசுக்கு உணர்த்தவும் அதற்கு எதிராகவுமே தாம் வீதியில் இறங்கியுள்ளதாக சட்டத்தரணிகள் இங்கு கருத்து தெரிவித்தனர்.

நாட்டின் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தின் ஊடாக சமூக வலைத்தளங்களின் முடக்கம், பொது மக்கள் மீதான வன்முறை என்பவற்றக்கு எதிராக தாம் நிற்பதுடன் இந்த வன்முறைகள் மூலம் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு நீதி உதவிகளை பெற்றக் கொடுப்பதற்கு தாம் எப்பொழுதும் முன் நிற்பதாக இந்த சட்த்தரணிகள் தெரிவித்தனர்.

நமக்கு பொறுப்பு கூறும் தலைமைத்துவ அரசே வேண்டும் சர்வதிகாரமோ குடும்ப ஆட்சியா எமக்க வேண்டாம் என்ற கோசத்தையும் அட்டன் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தினர் முன்வைத்தனர்.

Lawyers2

Lawyers3

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image