நாளை மின்வெட்டு அமுலாகும் முறையை அறிந்துக்கொள்ளுங்கள்

நாளை மின்வெட்டு அமுலாகும் முறையை அறிந்துக்கொள்ளுங்கள்

நாளையதினம் (03) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W ) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் பல்வேறு கட்டங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளை (03) மின்வெட்டு:
அனைத்து பிரதேசங்களுக்கும் பல்வேறு கட்டங்களில் 5¼ - 6 மணித்தியாலங்கள்

ABCDEFGHIJKL:
- மு.ப. 8.30 - பி.ப. 5.30 வரை 2¼ மணித்தியாலங்கள்
- பி.ப. 5.30 - இரவு 11.30 வரை 3 மணித்தியாலங்கள்

PQRSTUVW :
- மு.ப. 10.00 - பி.ப. 4.00 மணி வரை 2 மணித்தியாலங்கள்
- பி.ப. 4.00 - நள்ளிரவு 12.00 வரை 4 மணித்தியாலங்க
ள்

மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு மீண்டும் திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்தல்

இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்புகிறதா? இந்திய உயர்ஸ்தானிகராலயம் விளக்கம்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image