பட்டதாரிகள் / டிப்ளோமாதாரிகளுக்கு 20,000 ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை

பட்டதாரிகள் / டிப்ளோமாதாரிகளுக்கு 20,000 ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை

பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு பயிற்சிக் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வேலையற்ற பட்டதாரிகள் / டிப்ளோமாதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் - 2020
பயிற்சி கொடுப்பனவு வழங்குதல்

மேற்படி தலைப்பின்கீழ் 202202.25 ஆம் திகதியஅறிவிப்பு மேலதிகமாக

பந்தி 3 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இதுவரையில் இணைந்து சேவை ஃ மாகாண அரச சேவையின் கீழ் நிரந்தர இணைப்புக் கடிதத்தைப் பெற்றுக்கொள்ளாத பயிற்சியாளர் இருப்பின், அவர்களுக்கு மார்ச் மாதத்திற்கான பயிற்சி கொடுப்பனவை சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கவும்.

அந்த உத்தியோகத்தர்கள் நிரந்தர நியமனத்தைப் பெற்று புதிய சேவை நிலையத்துக்கு சமூகமளிக்கையில், கீழேயுள்ள படிவத்தை பூர்த்தி செய்து முறைசார்ந்த வகையில் சேவை நிலையங்களுக்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுப்பது உசிதமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியினால் இந்த அறிவித்தல் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு நேற்று (28) விடுக்கப்பட்டுள்ளது.

படிவத்தை பதிவிறக்க இந்த இணைப்பை அழுத்தவும்

மீண்டும் 5,000 ரூபா கொடுப்பனவு

 

 

277308007_426495445949883_3124391211395001038_n.jpg

277534155_426495385949889_5664680321377136774_n.jpg

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image