பட்டதாரிகளுக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குமான அறிவித்தல்

பட்டதாரிகளுக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குமான அறிவித்தல்

பட்டதாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி, நாளை (29) போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த சங்கம் விடுத்துள்ள அறிவித்தலில்,

தேசிய ஃ மாகாண பாடசாலைகளில் சேவையில் ஈடுபட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்.

ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகள்.

35 வயது என்ற வயதெல்லை நிபந்தனையால் சந்தர்ப்பங்களை இழந்துள்ள பட்டதாரிகள்.

தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்குப் பதிலாக ஒரேடியாக அங்கீகரிக்கப்பட்ட முறைமைக்கு அமைய நிரந்தர ஆசிரியர் ஆட்சேர்ப்பு செய்தல்.

2018 ஃ 2019 ஃ 2020 ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சமாந்தரமான சந்தர்ப்பங்கள் சிரேஷ்ட பட்டதாரிகளுக்கும் வழங்குதல்.

உள்ளிட்ட கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக நாளை (29) முற்பகல் 11 மணிக்கு கல்வி அமைச்சின் முன்னாள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்

திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில், பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்

சிறுவர்கள் தொடர்பில் அதிக அக்கறை செலுத்துமாறு வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தல்

277172571_1010710392985451_5648825864728357902_n.jpg

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image