உறுதியளித்தவாறு அரசாங்கம் தீர்வு வழங்கவில்லை: சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு

உறுதியளித்தவாறு அரசாங்கம் தீர்வு வழங்கவில்லை: சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு
உறுதியளித்தவாறு தங்களது பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படாமை காரணமாக, சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்திற்கு உரித்தான, தாதியர், நிறைவுகான், இடைநிலை வைத்தியர்கள் உட்பட 17 சங்கங்கள் இணைந்து இன்றும், நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றன.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி, கடந்த மாதம் 7ஆம் திகதி முதல், 9 நாட்களுக்கு சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டன.

இதன்போது, சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, சுகாதார தொழிற்சங்கங்கள் போராட்டத்தைக் கைவிட்டதாக சுகாதார தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

எனினும், மார்ச் மாதம் முதலாம் திகதிக்குள் தங்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

தீர்வு வழங்குவதற்காக, சுகாதார அமைச்சுக்;கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

எனினும், தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க, சுகாதார அதிகாரிகள் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமையால், இன்றும் நாளையும், வைத்தியர்கள் தவிர்ந்த, ஏனைய அனைத்து சுகாதார உத்தியோகத்தர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக ரவி குமுதேஷ் கூறியுள்ளார்.

அரசாங்கம் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அதனைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறது. இது 65 ஆயிரம் சுகாதார உத்தியோகத்தர்களின் பிரச்சினையாகும்.

எவ்வாறாயினும், சிறுவர் மற்றும் மகளிர் வைத்தியசாலைகள், புற்றுநோய், மற்றும் சிறுநீரக வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் தடையின்றி சேவைகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தொடர்பான செய்திகளுக்கு
 
 
 
 
 
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image