அரச தாதியர் சங்கத்துக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

அரச தாதியர் சங்கத்துக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

தொழிற்சங்க நடவடிக்கையைக் கைவிடுமாறு அரச தாதியர் சங்கத்திற்கும் அதன் தலைவர் சமன் ரத்னப்பிரியவுக்கும் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை உத்தரவு மார்ச் 11 வரை நீடிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால், இந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

அரச தாதியர் சங்கம் மேற்கொண்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பை தொடர்ந்து முன்னெடுப்பதை தடுக்கும் வகையில் கடந்த 10 ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.

அரச தாதியர் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்த உத்தரவு பிறப்பிக்கக் கோரி, சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்ததையடுத்து கொழும்பு மாவட்ட நீதவான் அருண அளுத்கே இந்த இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image