அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் அறிவித்தல்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் அறிவித்தல்

நீண்டகாலமாக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களை சிக்கலுக்குள் உள்ளாகும் தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்காம தொடர்பில் என்ற தலைப்பில் இந்தக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அகில இலங்கை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளரினால் 2022 ஜனவரி மாதம் 31 ஆம் திகதி (2022.01.31) கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு இணைக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் தொடர்பான பேச்சுவார்த்தையை 2022 மார்ச் மாதம் 8ஆம் திகதி (2022.03.08) முற்பகல் 10 மணிக்கு உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் 19 ஆவது மாடியில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலுக்காக உங்களது பங்குபற்றலை எதிர்பார்க்கின்றோம்

இதன்போது கலந்துரையாடப்படவேண்டிய வேறு பிரச்சினைகள் இருக்குமாயின்,  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 2022 மார்ச் மாதம் நான்காம் திகதி (2022.03.04) அல்லது அதற்கு முன்னர் தமக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளரின் சார்பில், மேலதிக செயலாளர் கே.ஜீ.தர்மதிலக்கவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம்,

முற்போக்கு பொருளாதார உத்தியோகத்தர் சங்கம்
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
அகில இலங்கை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம்
அரச அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம்
ஆகியவற்றின் செயலாளர்களுக்கு நேற்று முன்தினம் (25) அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

274793942_509155060800309_6742078923141939427_n.jpg

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image