தொழிலாளர்களுக்கான திடீர் அனர்த்த இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு

தொழிலாளர்களுக்கான திடீர் அனர்த்த இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு

சேவையில் ஈடுபட்டுள்ளபோது இடம்பெறும் திடீர் அனர்த்தங்களின் காரணமாக பாதிக்கப்படும் சேவையாளர்களுக்கு வழங்கப்படும் அதியுச்ச தொழிலாளர் இழப்பீட்டுத் தொகை ரூபா 20 இலட்சம் ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்றத்தில் கடந்த தினம் இடம்பெற்ற தொழிலாளர் விவகாரம் தொடர்பான மேற்பார்வை குழுவின் கூட்டத்தில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

சேவையில் ஈடுபடும்போது ஏற்படும் திடீர் அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்படும் சேவையாளர்களுக்கு மரணத்தின்போது அல்லது முழுமையான பாதிப்பிற்கு உள்ளாகும்போது தற்போது வழங்கப்படும் அதியுச்ச இழப்பீட்டுத் தொகை 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாகும்.

இந்த நிலையில், குறித்த இழப்பீட்டுத் தொகை 20 இலட்சம் ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image