ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான வயதெல்லையை அதிகரிக்குமாறு வலியுறுத்தல்

ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான வயதெல்லையை அதிகரிக்குமாறு வலியுறுத்தல்

ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான வயதெல்லையை அதிகரிக்குமாறு கல்வி அமைச்சிடம் வலியுறுத்தப்படவுள்ளது.


இதற்கமைய ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான வயதெல்லையை 45 ஆக அதிகரிக்குமாறு ஒன்றிணைந்த பயிலுநர் ஒன்றியம் மற்றும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் என்பன கல்வியமைச்சிடம் வலியுறுத்த உள்ளன.

இதற்காக எதிர்வரும் 28ஆம் திகதி மதியம் 12 மணிக்கு கல்வி அமைச்சுக்கு செல்ல உள்ளதாக அந்த சங்கங்கள் பேஸ்புக் மூலமாக அறிவித்துள்ளன.

எனவே சம்பந்தப்பட்டவர்கள் குறித்த சந்தர்ப்பத்தில் பங்கேற்குமாறு அந்த சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் மீள ஆரம்பம்

கல்வி கூட்டுறவு பொது சேவையாளர் சங்கத்தினர் இன்று பணிப்புறக்கணிப்பு

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image