வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் மீள ஆரம்பம்

வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் மீள ஆரம்பம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனைகள் இன்று (16) முதல் மீள ஆரம்பிக்கப்படுகின்றன.

யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் இதனை உறுதிப்படுத்தினார்.

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சுகாதார தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கடந்த வியாழக்கிழமை முதல் வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

குறித்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இன்று (16) முதல் யாழ். போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்வோருக்கான பி.,சி.ஆர் பரிசோதனைகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானித்ததாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மூலம் - நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image