மூன்று நாட்கள் மாத்திரமே வேலை - எதிர்ப்பு தெரிவித்துள்ள தோட்டத் தொழிலாளர்கள்!

மூன்று நாட்கள் மாத்திரமே வேலை - எதிர்ப்பு தெரிவித்துள்ள தோட்டத் தொழிலாளர்கள்!

வாரத்திற்கு மூன்று நாட்கள் மாத்திரமே வேலை வழங்குவதால் தாம் கடுமையாக பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டி பசறை யூரி தோட்ட காரியாலய பிரிவு தொழிலாளர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

பலாங்கொடை பெருந்தோட்ட நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் யூரி தோட்டத்தின் முகாமை தமக்கு வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே தொழில் தருவதாக இத்தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 வாரத்தில் குறித்த மூன்று நாட்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் தொழில் வழங்கினால் பறிக்கும் பச்சை தேயிலை கொழுந்து கிலோகிராமுக்கு ரூபா 40 வீதம் பெற்றத் தருவதாகவும் ஒரு நாள் சம்பளமான ரூபா 1000 பெற வேண்டுமானால் 18 கிலோகிராம் பச்சை தேயிலை கொழுந்து பறிக்க தாம் நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image