பட்டதாரிகளுக்கான பயிற்சி கொடுப்பனவு தொடர்பில் அறிவித்தல்

பட்டதாரிகளுக்கான பயிற்சி கொடுப்பனவு தொடர்பில் அறிவித்தல்

 வேலையற்ற பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்கும் திட்டம் 2020 இன் கீழ் சேவையில் இணைக்கப்பட்ட பட்டதாரிகளுக்கான சம்பளம் மற்றும் பயிற்சிக்கான கொடுப்பனவு 03.01.2022 வௌியிடப்பட்ட அறிக்கைக்கமைய வழங்கப்படும் என்று பொது சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் வௌியிடப்பட்டுள்ள கடிதத்தில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்கும் திட்டம் 2020இன் கீழ் சேவையில் இணைக்கப்பட்ட பெரும்பாலான பட்டதாரிகளுக்கும் தற்போது ஒன்றிணைந்த சேவையின் மாகாண பொது சேவைகள் அபிவிருத்தி அதிகாரிகளாக நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், 01.04.2022 அன்று நிரந்தர நியமனம் பெறவுள்ள பட்டதாரிகளும் அவர்களுக்கு நிரந்தர நியமனம் பெறப்படவுள்ள சேவை நிலையங்களில் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சம்பளம் மற்றும் பயிற்சிக் கொடுப்பனவு அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் வௌியிடப்பட்டுள்ள அறிக்கைக்கமைவாக வழங்கப்படவுள்ளது

அதேபோல், மாகாணசபை பட்டியலில் பெயர் எதிர்பார்த்துள்ள பயிலுநர் பட்டதாரிகள், கல்வியமைச்சில் இணைக்கப்பட்டுள்ள 01.04,2022 நிரந்தர நியமனம் பெறவுள்ள பயிலுநர் பட்டதாரிகள் மற்றும் இதுவரை பல்வேறு காரணங்களினால் நிரந்தர நியமனம் மற்றும் நிரந்தர சேவை நிலையம் குறிப்பிடப்பட்ட நியமனக் கடிதம் பெற்றுக்கொள்ளாத பட்டதாரிகள் தொடர்ந்தும் சிறிது காலத்திற்கு பயிலுநர்களாக சேவையாற்றுவர்.

அப்பயிலுநர்களுக்கான கொடுப்பனவு 2022 ஜனவரி மாதத்தினைப் போன்றே பெப்ரவரி மாதத்திற்கும் பிரதேச செயலாளர்களினால் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image