அதிபர் நியமனங்களின் போது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டனவா? ஆராயுமாறு உத்தரவு

அதிபர் நியமனங்களின் போது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டனவா? ஆராயுமாறு உத்தரவு

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனத்தின் போது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனத்தின் போது விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு மற்றும் அதன் பின்னரான தேர்வுகளின் போது, அரச சேவை ஆணைக்குழுவுக்கோ அல்லது கல்விச் சேவை ஆணைக்குழுவுக்கோ, விண்ணப்பதாரிகளினால் ஏதேனும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு உள்ளனவா என்பது தொடர்பில் கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, ஜனாதிபதி அவர்களினால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image