சுற்றுலாத்துறை ஊழியர்கள் போராட்டம்!

சுற்றுலாத்துறை ஊழியர்கள் போராட்டம்!

சுற்றுலாத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் 5000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குதல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் போராட்டம் ஒன்று நாளை (21) முன்னெடுக்கப்படவுள்ளது.

தொழில் திணைக்களத்தின் முன்பாக நாளை 1.30 மணிக்கு இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சுற்றுலாத்துறை ஊழியர்களின் சம்பளத்தை 5000 ரூபாவால் அதிகரித்தல், சேவைக் கொடுப்பனவை சம்பளத்துடன் இணைத்தல், பொருட்கள் சேதமடைந்தால் சேவைக் கொடுப்பனவில் கழிப்பதை தவிர்த்தல், பிரித்த சேவையை முறையை நிறுத்தல், கொவிட் காரணமாக தொழில் இல்லாமலாக்காமை போன்ற கோரிக்கைகள் முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Protest

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image