பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கை பணியாளர்

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கை பணியாளர்

பாகிஸ்தான் சியல்கோட் பகுதியில் இலங்கை பணியாளர் ஒருவர், பெருமளவானோரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 
பாகிஸ்தான் - சியல்கோட் வைராபாத் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
இதுதொடர்பான காணொளி இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன.
 
கலகக்காரர்கள் குறித்த இலங்கையரை, சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்துவிட்டு உடலை எரியூட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சியல்கோட்டிலுள்ள தனியார் தொழிற்சாலையொன்றில் பொது முகாமையாளராக கடமையாற்றிய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவரின் பெயர் பிரியந்த குமார என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
குறித்த இலங்கை பிரஜை கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
 
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக, பாகிஸ்தான் அரசாங்கம் முழுமையான விசாரணையை மேற்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கையின் வெளிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image