நாடளாவிய ரீதியில் மின்தடை: தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டது பொறியியலாளர் சங்கம்

நாடளாவிய ரீதியில் மின்தடை: தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டது பொறியியலாளர் சங்கம்

இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் சுமார் 5 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இன்று முற்பகல் 11.30 அளவில் நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மின்சார பொறியிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் போதே இந்த நிலைமை ஏற்பட்டது.

மின் துண்டிப்பை அடுத்து பல பிரதேசங்களிலும் நீர் விநியோகமும் தடைப்பட்டது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தாம் முன்னெடுக்கும் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக கைவிடுவதாக மின்சார பொறியியலாளர் சங்கம் இன்று பிற்பகல் அறிவித்தது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image