வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தல்

வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாகக்கூறி நிதி மோசடியில் ஈடுபடுகின்றமை தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

 
ஜப்பான், தென்கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் முன்னெடுக்கப்படும் ஆட்சேர்ப்புக்கு அமைவாக தொழில்களை பெற்றுத் தருவதாகக்கூறி இந்த மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தென்கொரியாவிற்கு தொழில் வாய்ப்புகளுக்காக உள்வாங்கும் மற்றும் பயிற்சியளிக்கும் பணிகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் மாத்திரம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேநேரம், ஜப்பான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுவதானது, இரு நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்படிக்கைகளுக்கு அமைய, அனுமதி வழங்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் ஊடாக மாத்திரமே என அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.
 
எனவே, இது தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image