மோசமான காலநிலையினால் மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவைகள்

மோசமான காலநிலையினால் மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவைகள்

நாட்டில் நிலவும் மிக மோசமான காலநிலை காரணமாக ரயில் போக்குவரத்தை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு காரணமாக றம்புக்கனவுக்கும் கடுகன்னாவுக்கும் இடையிலான ரயில் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சிலாபம் வரையிலான ரயில் பாதையில் பங்கதெனியவிலிருந்து புத்தளத்திற்கான ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. வௌ்ளம் காரணமாக குறித்த பாதை பாதிப்படைந்துள்ளது. மேலும் கண்டியில் இருந்த வத்தேகம வரையிலான ரயில் பாதையும் கடுமையான மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு தொடக்கம் பொல்கஹாவல வரையான பிரதான ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக மறு அறிவித்தல் வரை பிரதான புகையிரத சேவை பொல்கஹாவெல வரை மாத்திரமே இடம்பெறும் என்று இலங்கை புகையிரத நிலைய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image