ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கம் இன்று தேசிய எதிர்ப்பு தின போராட்டம்

ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கம் இன்று தேசிய எதிர்ப்பு தின போராட்டம்

சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறுகோரி, ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று தேசிய எதிர்ப்பு தின போராட்டத்தை முன்னெடுக்கின்றன.

 
இதற்கமைய, அனைத்து வலயக் கல்விப் பணிமனைகளுக்கு முன்னால், இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்தப் போராட்டம் முன்னெக்கப்பட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் லிப்டன் சுற்று வட்டத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமது இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக, ஏனைய சில தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image