பட்டதாரிகள் தகவல்களை வழங்க மீண்டும் வாய்ப்பு

பட்டதாரிகள் தகவல்களை வழங்க மீண்டும் வாய்ப்பு

பட்டதாரிகளை பயிலுநர்களாக சேவையில் இணைத்தல் திட்டம் 2020 இற்கு அமைய பயிலுநர்களா இணைக்கப்பட்டவர்களை நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்வதன் முதற்கட்டமாக ஒன்லைன் ஊடாக தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

பொது நிருவாக அமைச்சினூடாக சேகரிக்கப்படும் தகவல்களை உரிய திகதியில் உங்கள் தகவல்களை பதிவேற்றம் செய்ய முடியாது போயிருப்பின், உரிய தகவல்களை முழுமையாக வழங்க முடியாது போயிருப்பின், பயிற்சி காலப்பகுதியில் மாகாணங்களுக்கிடையில் மாற்றல் பெற்று சென்றிருப்பின், கடவுச்சொல்லை மறந்திருப்பின், அனைத்து தகவல்களும் வழங்கப்பட்ட பின்னர் தொழில்நுட்ப காரணமாக உள்ளீடு செய்ய முடியாது போயிருப்பின், அவர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்க கடந்த 16ம் திகதி அமைச்சின் உயரதிகாரிகளுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.

முதற் செயற்பாடாக ஒன்றிணைந்த சேவையினூடாக வௌியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 0112 696 068/ 071 525 3192 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு அறியத்தரவும்.

குறித்த பிரச்சினை தொடரபான மேலதிகமாக தெரிந்துகொள்ள அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கத்தின் வட்சப் 071 817 8268 அல்லது இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சல் ஊடாக தெரியப்படுத்தவும்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image