வீட்டிலிருந்து வெளியேறவும் கட்டுப்பாடு: புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது

வீட்டிலிருந்து வெளியேறவும் கட்டுப்பாடு: புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது

சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய கோவை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய,

⭕ வீட்டிலிருந்து வௌியேறுவதற்கு ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படுவதுடன், தொழில் நிமித்தம் அல்லது சுகாதார தேவைகளுக்காக மாத்திரமே வெளியில் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

⭕ அத்தியாவசிய தேவைகளுக்காக ஒவ்வொரு மாகாணத்திற்குள்ளும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில், ஆசன எண்ணிக்கைக்கு அமைய பஸ் மற்றும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சுகாதார வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

⭕ தனியார் மற்றும் வாடகை வாகன சேவைகள், அந்தந்த பகுதிகளுக்குள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன், கார் மற்றும் முச்சக்கரவண்டிகளில் ஆசன எண்ணிக்கைக்கு அதிகரிக்காத வகையில் சேவைகள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டடுள்ளது.

⭕ ஆசன எண்ணிக்கைக்கு அமையவே ஏனைய வாகனங்களும் சேவையில் ஈடுபட வேண்டும் என சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள புதிய வழிகாட்டல் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

⭕  ஆடை விற்பனை நிலையங்களில் கடுமையான சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

⭕  விவசாய நடவடிக்கைககளின் போது சமூக இடைவௌியுடன், முகக்கவசம் அணிந்து, சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

⭕  சில்லறை வர்த்தக நிலையங்களில் ஒரே தடவையில், அதிகபட்சமாக 10 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படுகின்றது.

⭕  திறந்த வர்த்தக நிலையங்கள் மற்றும் வாராந்த சந்தைகளில், அதன் இடவசதிகளின் அடிப்படையில் 25 வீதத்தினரையே ஒரே நேரத்தில் அனுமதிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

⭕  பேக்கரி, சிகையலங்கார நிலையங்கள், மின் உபகரண விற்பனை நிலையங்கள், கட்டட நிர்மாண பொருட்கள், தளபாட விற்பனை நிலையங்கள், புகைப்படங்களை எடுக்கும் நிலையங்களிலும் 25 வீதமானோருக்கே அனுமதி வழங்கப்படுகின்றது.
மூலம் - நியூஸ்பெஸ்ட் 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image