கொவிட் தொற்றுக்குள்ளான வைத்திய அதிகாரி மரணம்!

கொவிட் தொற்றுக்குள்ளான வைத்திய அதிகாரி மரணம்!

கலிகமுவ சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியால பிரதான வைத்திய அதிகாரி வைத்தியர் பத்ம ஷாந்த கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

ஒரு மாதத்திற்கு முதல் தொற்றுக்குள்ளாகிய அம்மருத்துவர் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் (09) நேற்று உயிரிழந்துள்ளார்.

கேகாலை பொது வைத்தியசாலையில் மகப்பேற்று வாட்டில் பணியாற்றி வந்த தாதியொருவர் உட்பட நான்கு பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image