ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர் ஆசிரியர் சங்க உறுப்பினர் கைது

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர் ஆசிரியர் சங்க உறுப்பினர் கைது

ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வாகனப்பேரணியாக வந்து போராட்டம் நடத்திய அதிபர் ஆசிரியர் சங்க அங்கத்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போதைய தொற்று சூழ்நிலையில் போராட்டம் நடத்த வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க அங்கத்தினர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 26 ஆண்களும் 16 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் வருகைத்தந்த 10 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image