கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தொற்று இல்லை

கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தொற்று இல்லை

​நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அதிபர் ஆசிரியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனை முடிவுகள் எதிர்மறையானவை என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக வாகனப்பேரணியில் சென்று போராட்டம் நடத்திய அதிபர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை மீறினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 22 ஆண் ஆசிரியர்கள் மற்றும் 16 பெண் ஆசிரியர்கள் உட்பட 44 பேருக்கு கொழும்பு நகரசபையினால் ரெபிட் அன்டிஜன் பரிசோனை மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இன்று (5) நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image