மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து மீள ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து மீள ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு
இடைநிறுத்தப்பட்டுள்ள  மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்தை மீள ஆரம்பிக்கும் திகதி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக  இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
 
கொவிட்-19 பரவல் காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
 
இந்த நிலையில் அவற்றை மீள ஆரம்பிக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image