சிறுவர் தொழிலாளர்களை இல்லாதொழிக்க NCPA புதிய யோசனை

சிறுவர் தொழிலாளர்களை இல்லாதொழிக்க NCPA புதிய யோசனை

சிறுவர் தொழிலாளர்களை இல்லாது செய்யும் நோக்கில் புதிய திருத்தத்தை மேற்கொள்வது குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கவனம் செலுத்துகிறது.

இதற்கமைய, ஊழியர்களை தொழிலுக்கு இணைத்துக்கொள்ளும் வயதெல்லையினை 18ஆக அதிகரிப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு மாதங்களில் அதனை நாடாளுமன்றில் முன்வைத்து சட்டமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

1956ஆம் இலக்க 47ஆம் சரத்தின் படி, 14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொழில்களுக்கு செல்லும் சந்தர்ப்பம் காணப்பட்டது. எவ்வாறாயினும், கடந்த ஜனவரி மாதம் தொழிலுக்கு செல்வதற்கான வயதெல்லை 16ஆக அதிகரிக்கப்பட்டது.

இதன்படி, 16 வயதுடைய ஒருவரை வேலைக்கு அமர்த்தினாலும், அவரை ஆபத்தான தொழில்களில் ஈடுப்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் தொழிலாளர்களை இல்லாது செய்யும் நோக்கில் புதிய திருத்தத்தின் அடிப்படையில் ஊழியர்களை தொழிலுக்காக உள்வாங்கும் வயதெல்லையினை 18 ஆக உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image