அரச பணியாளர்களை சேவைக்கு அழைப்பதற்கான சுற்றுநிரூபம் வௌியானது

அரச பணியாளர்களை சேவைக்கு அழைப்பதற்கான சுற்றுநிரூபம் வௌியானது

கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் அரச பணியாளர்களை சேவைக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு இந்த சுற்று நிருபத்தை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, அரச ஊழியர்கள், வாரத்திற்கு இரண்டு வேலை நாட்கள், தங்களின் விடுமுறை நாட்களில் கழிக்கப்படாமல், சேவைக்கு சமுகமளிக்காதிருக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

விடுமுறை பெற்றுக்கொள்ளாத அரச ஊழியர் ஒருவருக்கு, மாதத்தில் சேவைக்கு சமுகமளிக்காதிருப்பதற்கான உச்சப்பட்ட கால எல்லையை, எட்டு நாட்களுக்கு மேலாக அதிகரிக்காத வகையில், தமது நிறுவனத்திற்கு மிகவும் பொருத்தமான முறையில், அவரை சேவைக்கு அழைக்காதிருப்பதற்கான ஏற்பாட்டை மேற்கொள்வதற்கான அதிகாரம் அந்தந்த நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுநிரூபத்தை வாசிக்க

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image