நாட்டில் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு!

நாட்டில் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு!
நாட்டில் உள்ள சகல பாடசாலைகளையும், எதிர்வரும் 30 ஆம் திகதிவரை மூடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
 
 கொவிட்-19 பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து முன்பள்ளிகளையும், மேலதிக வகுப்புக்களையும் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை மூடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image