அரச ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்கும் முறை!

அரச ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்கும் முறை!

பொதுச்சேவை ஊழியர்கள் பகுதி பகுதியாக பணிக்கு சமூகமளிக்கும் வகையில் சுற்றுநிருபம் வௌியிடப்படவுள்ளதாக பொது நிருவாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜே. ஜே. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இன்று (27) தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இச்சுற்றுநிரூபம் வௌியிடப்படவுள்ளது.

நாட்டில் கொரோனா பரவில் திடீரென அதிகரித்ததையடுத்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நிறுவன பிரதானிகள் தேவைக்கேட்ப ஊழியர்களை பணிக்கு அழைக்கும் வகையில் சுற்றுநிருபம் வௌியிடப்படவுள்ளது. குருணாகலை, கம்பஹா, மேல்மாகாணம் என்பவற்றை விசேட கவனத்திற்கொண்டு இச்சுற்றுநிருபம் வௌியிடப்படும். இவ்விடயம் தொடர்பில் இன்று கலந்துரையாட நடத்தப்படவுள்ளது என்று செயலாளர் மேலும் தெரிவித்தார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image