8.00 மணியுடன் தனிமைப்படுத்தப்படவுள்ள பிரதேசங்கள்

8.00 மணியுடன் தனிமைப்படுத்தப்படவுள்ள பிரதேசங்கள்

காலி மாவட்டத்தின் ரத்தகம பொலிஸ் பிரிவில் உள்ள இம்புல்கொட மற்றும் கட்டுதம்பே ஆகிய கிராமசேவகர் பிரிவு இன்றிறவு 8.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்படவுள்ளது என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

ஏற்கனவே 3 மாவட்டங்களில் 8 கிராம சேவகர் பிரிவுகள் இன்றிறவு 8.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

நாட்டில் கொவிட் 19 பரவல் அதிகரித்துள்ளமை தடுக்கும் வகையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்

காலி மாவட்டம் - ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிவில் இம்புல்கொட, கட்டுதம்பே -

கம்பஹா மாவட்டம் - கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஹேன, ஹீரலுகெதர மற்றும் கலுவகல்ல மற்றும் மினுவங்கொட பொலிஸ் பிரிவில் அஸச​வென்னாவத்த கிழக்கு கிராம சேவகர் பிரிவுகள்

களுத்துறை மாவட்டம் - மீரகஹதென்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிரிஸ்வத்த, பெலவத்த வடக்கு மற்றும் பெலவத்த கிழக்கு கிராம சேவகர் பிரிவுகள்.

திருகோணமலை மாவட்டம் - திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூம்புஹார் கிராம சேவகர் பிரிவு

அத்துடன் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் 2 வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image