தபால் திணைக்களத்தில் மூவாயிரம் பேர் சேவையில்

தபால் திணைக்களத்தில் மூவாயிரம் பேர் சேவையில்

தபால் திணைக்களத்தில் காணப்படும் வெற்றிடங்களுக்கு 3000 பேரை புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மாகாண மட்டங்களில் இம்மூவாயிரம் பேர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்தார்.

கனிஷ்ட தபால் சேவை கடமைகளுக்கு மாகாண மட்டங்களில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள இப்புதிய ஊழியர்களுக்கு நாளாந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. திணைக்களத்தில் ஏற்படும் வெற்றிடங்களுக்கு அமைய குறித்த ஊழியர்கள் நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவர் என்றும் பிரதி பொலிஸ் ்மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடிதங்களை பகிர்ந்தளித்தல், அலுவல உதவியாளர்கள் போன்ற சேவைகளுக்கு இவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image