சிறுவர் வைத்தியசாலை பார்வையாளர் நேரத்தில் மாற்றம்

சிறுவர் வைத்தியசாலை பார்வையாளர் நேரத்தில் மாற்றம்

கொழும்பு சீமாட்டி ரிஜ்வே  சிறுவர் வைத்தியசாலையில் நோயாளிகளை பார்வையிடுவதற்கான நேரத்தில் மாற்றங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளொன்றுக்கு ஒரு தடவை ஒருவர் மட்டுமே நோயாளியை பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நோயாளிகளை சிகிச்சைக்காக அழைத்து வரும்போது ஒருவர் மட்டுமே வருமாறும் முடிந்தளவு 1390 என்று இலக்கத்துடன் தொடர்புகொண்டு சிகிச்சைக்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறும் வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image