மியன்மார் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் நாடு திரும்பினர்

மியன்மார் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் நாடு திரும்பினர்

மியன்மார் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்ட 12 இலங்கை மீனவர்கள் நேற்று (23) கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.

இம்மீனவர்கள் நேற்று 11.30 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட எஸ். கியு 468 என்ற சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இலங்கையை வந்தடைந்தனர்.

மீன்பிடிக்காக பயன்படுத்திய இயந்திரப்படகின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக செயற்படாமல் போனநிலையில் இம்மீனவர்கள் மியன்மார் நோக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

நாடு திரும்பிய மீனவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image