சட்டத்தரணிகளுக்கு பொலிஸ் பதவி- மீள ஆராயுமாறு கோரும் சட்டத்தரணிகள் சங்கம்

சட்டத்தரணிகளுக்கு பொலிஸ் பதவி- மீள ஆராயுமாறு கோரும் சட்டத்தரணிகள் சங்கம்

சட்டத்தரணிகள் 150 பேர் பிரதான பொலிஸ் பரிசோதகர்களாக பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்து சேவையாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் மீண்டும் ஆராயுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நீதியமைச்சரிடம் கோரியுள்ளது.


நீதி அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சட்டத்தரணிகள் சங்கம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

வழக்குகளை விரைவுப்படுத்த வேண்டிய தேவை காணப்படின் மாவட்டங்களுக்கு உள்ளேயே அரச வழக்கு பிரிவு ஒன்றைய உருவாக்குமாறும் அவர்கள் தமது கடிதத்தில் கோரியுள்ளனர்.

இதனூடாக சட்டத்தரணிகளின் ஒழுக்கவிதிகளில் பாதிப்பு ஏற்படக்கூடுமெனவும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தில் 150 சட்டதரணிகளை உள்வாங்க தீர்மானி்க்கப்பட்டுள்ளதுடன், தமிழ் பேசும் சட்டத்தரணிகளுக்கு முன்னுரிமை வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image