தைப்பொங்கலை வீடுகளில் கொண்டாடுமாறு வலியுறுத்து

தைப்பொங்கலை வீடுகளில் கொண்டாடுமாறு வலியுறுத்து

நாளை (13) நாடு முழுவதும் உள்ள தமிழர்கள் தைப்பொங்கலை கொண்டாடுகின்றனர். தைப்பொங்கலை வீடுகளிலேயே இருந்து கொண்டாடுமாறு சுகாதார ​சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தை பிறப்புடன் வார இறுதியும் வருகின்றமையினால் நீண்ட விடுமுறை தினத்தில் மக்கள் ஒன்றாக கூடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் ஏனைய பண்டிகைகளை கொண்டாடியது போல பாதுகாப்பாக வீடுகளில் இருந்து கொண்டாடுமாறும் அவர் இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

பண்டிகைக் காலத்தில் உறவினர் வீடுகளுக்கு செல்பவர்களையும் சுற்றுலா செல்கிறவர்களையும் பரிசோதிக்க ஆங்காங்கே குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் 11 குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இக்குழுக்கள் 24 மணி நேரமும் சேவையில் ஈடுபடுத்தும் சாத்தியங்கள் காணப்படுகின்றன என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image