பட்டதாரிப் பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல்

பட்டதாரிப் பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல்

பட்டதாரிப் பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல் – 2019 கட்டம் II மற்றும் III ​தொடர்பில் பொது நிருவாக அமைச்சு இன்று அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. 

பொது நிருவாக , உள்விவகார, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் உத்தியோகப்பூர்வ முகப்புத்தக்கணக்கில் இவ்வருவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

அவ்வறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

நிகழ்நிலை முறையில் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்நிலை முறைமையில் தகவல்களை உள்ளீடு செய்த பின்னர் அச்சுப்பிரதியொன்றை பெற்றுக்கொள்வதற்கு எனது 2020.12.20 திகதிய கடிதம் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

முறைமையினுள் உள்ளீடு செய்யப்பட்ட தகவல்களை அச்சிப்பிரதியெடுக்கும்போது சில படிவரீதியான வேறுபாடுகள் எழுவதாக எனக்கு அறியத்தரப்பட்டுள்ளதுடன், அந்நிலைமையினை சரிசெய்வதற்கு தேவையான விரைவான நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய (டிசம்பர் 29) தினத்துக்குள் அவ் அலுவல் முடிவுக்கு வருவதுடன் நாளை (டிசம்பர் 30) வரை தற்காலிகமாக பிரதியெடுக்காதிருக்கும்படி தயவுடன் அறியத்தருகின்றேன். தற்போதும் நீங்கள் பெற்றுள்ள அச்சுப்பிரதியில் படிவம் தொடர்பில் எதாவது வேறுபாடுகள் காணப்பட்டால், குறித்த திருத்தம் செய்யப்பட்டபின் மீண்டும் அச்சுப்பிரதியொன்றை பெற்றுக்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

– இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image