வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் சங்க போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் சங்க போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

தேசிய வளங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க அமைச்சர் தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அகில இலங்கை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட அடையாள வேலைநிறுத்தப்போராட்டம் நேற்று (07) மாலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதாக துறைசார் இராஜாங்க அமைச்சர் உறுதியளித்ததையடுத்து இ்ப்போராட்டம் கைவிடப்பட்டதாக அச்சங்கத்தின் தலைவர் பிரபாஸ் கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவ தேசிய நீர்நிலை பாதுகாப்பு உட்பட நாட்டில் உள்ள தேசிய வளங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நேற்று (07) காலை இவ்வடயாள வேலைநிறுத்தப் பேராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image