சர்வதேச விமானநிலையம் ஜனவரியில் திறக்கப்படும்!

சர்வதேச விமானநிலையம் ஜனவரியில் திறக்கப்படும்!

சுற்றுலா பிரயாணிகள் நாட்டுக்கு வருகைத் தரும் நிமித்தம் பண்டாநாயக்க சர்வதேச விமானநிலையம் எதிர்வரும் ஜனவரி மாதம் மீள திறக்கப்படவுள்ளது.

எனினும் குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்கு மட்டுமே சுற்றுலா பிரயாணிகள் செல்ல அனுமதிக்கப்படவுள்ளனர்.

சுகாதார அதிகாரிகளினஅனுமதியுடன் விமானநிலையம் மீள திறப்பதற்கான திகதி அறிவிக்கப்படும்.

சுகாதார அதிகாரிகள் மற்றும் சுற்றுலாத்துறையை சேர்ந்த அதிகாரிகள் உள்ளடங்கிய குழு, விமானநிலையம் மீள திறக்கப்பட்டதன் பின்னர் பின்னபற்றவேண்டிய வழிமுறைகளை தயாரிக்கவுள்ளது.

இக்குழு கடந்த சனிக்கிழமை சந்தித்து உரையாடியது. தொடர்ந்து நேற்றும் கலந்துரையாடியதுடன் இன்றும் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

சுற்றுலாப்பிரயாணிகளுக்காக விமானநிலையம் திறக்கப்பட்ட பின்னர் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் தொடர்பில் இரு முன்மொழிவுகள் ஆரம்ப கட்டமாக முன்வைக்கப்பட்டுள்ளன. ஒன்று சுற்றுலாப்பிரயாணிகள் விமானநிலையத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இடத்திற்கு நேரடியாக செல்வதற்கானது. அடுத்தது நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர்ந்து அனைத்து இடங்களுக்கும் சுற்றுலாப்பிரயாணிகள் செல்வதற்கானது என்று குழு அங்கத்தவர்களில் ஒருவராக நிமேஷ் ஹேரத் டெய்லி மிரர் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image