சுகாதார வழிகாட்டல்களுக்கமைய விமானநிலையம் திறக்க நடவடிக்கை

சுகாதார வழிகாட்டல்களுக்கமைய விமானநிலையம் திறக்க நடவடிக்கை

சுகாதார அதிகாரிகளின் அனுமதியுடன் கொவிட் வழிகாட்டல்களுக்கமைய சுற்றுலாத்துறையினர் இலங்கை வருவதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை திறக்க திட்டமிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

விரைவில் சர்வதேச விமான நிலையத்தை திறக்குமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடல் நேற்று (03) இடம்பெற்றது.

இதேவேளை, கொவிட் சுகாதார வழிகாட்டல்களுக்கமைவாக சுற்றுலாப்பயணிகள் பயணிக்கக்கூடிய 80 இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளது என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவி கிர்மாலி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image