9 மாத குழந்தையின் தாயை வௌிநாட்டுக்கு அனுப்பிய நபர் கைது

9 மாத குழந்தையின் தாயை வௌிநாட்டுக்கு அனுப்பிய நபர் கைது

ஒன்பது மாத குழந்தையின் தாயை சட்டவிரோதமாக வௌிநாட்டுக்கு அனுப்பிய இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினால் குறித்த நபர் கெக்கிராவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐந்து வயதுக்குக் குறைந்த குழந்தைகள் உள்ள பெண்கள் தொழிலுக்காக வௌிநாடு செல்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த பெண்ணுக்கு குழந்தைகள் இல்லையென போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டு வௌிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சந்தேகநபர் கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு நாளை (04) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image