இலங்கை அரசுக்கு எதிர்ப்பை வௌியிட்ட புலம்பெயர் இலங்கையர்கள்

இலங்கை அரசுக்கு எதிர்ப்பை வௌியிட்ட புலம்பெயர் இலங்கையர்கள்

இலங்கை அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ள எதிர்ப்பு அலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உலக நாடுகளில் வாழும் புலம்பெயர் இலங்கையர்களும் தமது எதிர்ப்பை வௌியிட்டு வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன், பர்த், கென்பரா ஆகிய நகரங்களில் வாழும் இலங்கையர்களும் நியுசிலாந்தின் ஓக்லண்ட் நகரில் வாழும் இலங்கையர்களும் இன்று (03) இலங்கை அரசுக்கு தமது எதிர்ப்பை வௌியிடும் வகையிலான வாசகங்களை ஏந்திய பதாதைகளுடன் காட்சியளித்தனர்.

மேலும், தென்கொரியா, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளில் வாழும் அதிக எண்ணிக்கையான இலங்கையர்களும் தமது எதிர்ப்பினை இன்று வௌியிட்டமை குறிப்பிடத்தக்கது.

protest migrant1

Protest migrant 3

Protest migrant 4

Protest migrant 5

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image