மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் 3,000 இலங்கையர்களுக்கு கொவிட் தொற்று

மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் 3,000 இலங்கையர்களுக்கு கொவிட் தொற்று

மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்புரியும் இலங்கையர்களில், சுமார் 3,000திற்கும் அதிகமானோர் கொவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன் இதுவரை சுமார் 70திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 14 மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நாடுகளிலுள்ள இலங்கைக்கான தூதரகங்கள் மற்றும் கொன்சியூலர் அலுவலகங்களின் ஊடாகஇ வெளிவிவகார அமைச்சுக்கு இந்த விடயம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிகளுக்கு சென்று, உடன்படிக்கை காலம் நிறைவடைந்த சுமார் 45,000திற்கும் அதிகமானோர், தாயகம் திரும்ப முடியாது நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அந்தந்த நாடுகளில் கொவிட் தொற்றுக்குள்ளாகிய சுமார் 2,700 இலங்கையர்கள் குணமடைந்துள்ளதாக அறிய முடிகின்றது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image