பிரியந்த கொலை குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை

பிரியந்த கொலை குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை

 இலங்கை புலம்பெயர் ஊழியரான பிரியந்தவை கொடூரமான முறையில் கொலை செய்த 6 குற்றவாளிகளுக்கு லகூர் நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் 76 பேருக்கு தலா இரு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சியல்கோட் பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் பொது முகாமையாளராக பணியாற்றி வந்தநிலையில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு பிரியந்த குமார என்ற இலங்கையர் உயிரிழந்தார். இச்சம்பவம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 3ம் திகதி இடம்பெற்றது.

சமயத்தை நிந்தனை செய்தார் என்று குற்றஞ்சாட்டி தொழிற்சாலை ஊழியர்கள் உட்பட கும்பலினால் பிரியந்த குமார கொடூரமான முறையில் தாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image