பிரியந்தவின் பதவிக்கு மற்றொரு இலங்கையர்?

பிரியந்தவின் பதவிக்கு மற்றொரு இலங்கையர்?

அண்மையில் பாகிஸ்தான் சியல்கோட் நகரில் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட புலம்பெயர் தொழிலாளரான பிரியந்த குமாரவின் பதவிக்கு இலங்கையர் ஒருவரையே நியமிக்க அத்தொழிற்சாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானில் சமய நல்லிணக்க தொடர்பான விசேட தூதுவரான ஹவீஸ் தாஹிர் மெஹெமுதல் அப்ராபி மறறும் சமயத் தலைவரான மவுலான தரீக் ஜமில் ஆகியோர் பாகிஸ்தானுக்கான இலங்கை தூதுவர் வைஸ் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரமவுடனான சந்திப்பின் போது இவ்விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளனர்.

தொழிற்சாலை மேலாளராக பணியாற்றிய பிரியந்த குமார, இம்மாதம் 3ம் திகதி சமயத்தை அவமதித்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு அத்தொழிற்சாலை தொழிலாளர்களினாலேயே மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image